திருச்சி: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஆன்மீக புத்தக நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களின் அறிவுரையின்படி திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் பக்தர்களின் வசதிக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 108 திவ்ய தேசங்களில் முதன்மைத் திருக்கோயிலான அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து இத்திருக்கோயிலில் அமைந்திருக்கும் ஸ்ரீரெங்க விலாச மண்டபத்தில் ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.