மும்பை: நடிகை சுஷ்மிதா சென் (46), பண மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய லலித் மோடி (56) இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியான நிலையில், வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பெங்காலி மொழியில் வெளியிட்டுள்ள பதிவு: சுஷ்மிதா சென்னை கொல்கத்தா விமான நிலையத்தில் சந்தித்தேன். என்னை கட்டிப்பிடித்தார். நான் ஆச்சரியப்பட்டேன். காரணம், இளம் வயதில் 2 பெண் குழந்தைகளை அவர் தத்தெடுத்ததுதான். இதனால் அவர் மீது அதிக மரியாதை ஏற்பட்டது.