சென்னை: சின்ன சேலம் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி இறந்த விவகாரத்தில் காவல்துறையினர் முறையான விசாரணை செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்துவந்த நிலையில் மர்மமான முறையில் இறந்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.