சென்னை: பள்ளி நிர்வாகிகளை கைது செய்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி இரு தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.