கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கொட்டும் மழையில் குடியிருப்பு அருகே உலா வந்த ஒற்றை யானை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை ஒன்று சர்வ சாதாரணமாக கொட்டும்‌ மழையில் நனைந்தபடி குடியிருப்பு அருகே வந்துள்ளது.

யானையை கண்ட குடியிருப்பு வாசிகள் கடும் அச்சத்துடன் அதனை வனப்பகுதியில் விரட்டினர். மழையால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் தற்போது குடியிருப்பு பகுதியில் வந்த யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் கண்காணித்து யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: