நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை ஒன்று சர்வ சாதாரணமாக கொட்டும் மழையில் நனைந்தபடி குடியிருப்பு அருகே வந்துள்ளது.