ரவீந்திரநாத் நீக்கம் சர்வாதிகாரம் எடப்பாடி அறிவிப்பு செல்லாது: ஓபிஎஸ் பேட்டி

சென்னை: தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்தை விலக்கி இருப்பது சர்வாதிகாரத்தின் உச்சநிலை. எடப்பாடி பழனிசாமி அறிவிக்கின்ற எந்த அறிவிப்பும்  கழக சட்டப்படி செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக 38 இடங்களில் போட்டி போட்டு ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று தேனி நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளோம். இந்நிலையில் ரவீந்திர நாத்தை விலக்கி இருப்பது சர்வாதிகாரத்தின் உச்சநிலை. இது அவருடைய தன்னிசையான முடிவு. எடப்பாடி பழனிசாமி அறிவிக்கின்ற எந்த அறிவிப்பும் கழக சட்டப்படி செல்லாது.

Related Stories: