கூடலூர்: தொடர் மழையால் குமுளி மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பபட்டது.தேனி மாவட்டம் தமிழக, கேரள எல்லைப் பகுதியான குமுளிக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தேனி-கொல்லம் நெடுஞ்சாலையில் லோயர் கேம்ப்பிலிருந்து 6 கிலோமீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலைச்சாலையில் செல்கிறது. தேக்கடி, வாகமன் சுற்றுலா செல்லும் சுற்றுலா வாகனங்களும், குமுளிக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களும், கேரளா செல்லும் சரக்கு வாகனங்களும், நாள்தோறும் கூலித்தொழிலாளர்களுடன் கேரளா செல்லும் வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியே செல்கிறது.