வாலாஜாபாத்: தினகரன் செய்தி எதிரொலியால், வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் ெபாதுமக்களுக்கு இருக்கைகள், குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், அலுவலகம் வரும் பொதுமக்கள் தினகரன் நாளிதழுக்கு தங்களது வாழ்த்து தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கீழ் தென்னேரி, வாலாஜாபாத், மாகரல் ஆகிய மூன்று குறு வட்டங்களை இணைத்து தாலுகா அலுவலகங்களாக உருவாக்கப்பட்டன. இப்பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் உள்ளவர்கள் தங்களின் புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், ஆதார் அட்டை, பட்டா, பட்டாவில் பெயர் மாற்றம், நில அளவை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் சம்பந்தமாக அதிகாரிகளை சந்திக்க நாள்தோறும் வந்து செல்கின்றனர்.