சென்னை: 949 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிவன் கோயில் மாயம் என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு புகார் அனுப்பி உள்ளார். கர்நாடகாவின் தும்சூர் மாவட்டத்தில் உள்ள கோட்டேகிரி என்ற குக்கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு அருகே இருக்கும் அரச மரத்திற்கு அடியில், கல்வெட்டு கண்டறியப்பட்டது. ராஜராஜ சோழனின் முதல் பேரனாகிய ஸ்ரீ ஸ்வஸ் ஸ்ரீ உடையார் ராஜாதிராஜ தேவரால் பொரிக்கப்பட்ட கல்வெட்டுகளில் பழங்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கிரந்த எழுத்துக்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.