ஈரோடு: பெண் ஒருவருக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்த வழக்கில் ஈரோடு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.19 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 2022ல் நாமக்கல்லை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மனைவி சரோஜா சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சரோஜாவுக்கு மருத்துவர் கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்ததில் 88 சதவீதம் உடல் செயலிழந்து முடக்க நிலைக்கு சென்றார். இது குறித்து தனியார் மருத்துவமனை மீது சரோஜாவின் கணவர் தியாகராஜன் ஈரோடு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.