மதுரை: காமராஜர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் ஆளுநரிடம் 136 பேர் மனு அளிக்கும் போராட்டம் நடத்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 8-ம் தேதி தற்காலிக பணியாளர்கள் 136 பேரை நிர்வாக நிதிச்சுமை காரணமாக காமராஜர் பல்கலைக்கழகம் பணிநீக்கம் செய்தது. பணிநீக்கம் செய்யபட்ட 136 பேரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 136 பேர் மனு அளிக்கும் போராட்டம் நடத்த போவதாக வந்த தகவலை அடுத்து பல்கலை பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.