டோக்கியோ: ஜப்பானில் நேற்று நடந்த நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஜப்பானில் நாடாளுமன்ற மேல்சபைக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போதுதான், ஆளும் விடுதலை ஜனநாயக கட்சிக்கு ஆதரவு திரட்ட நாராவில் நடந்த கூட்டத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டு கொல்லப்பட்டார். இதனால், தேர்தலுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் பலத்த பாதுகாப்பு இடையே வாக்களித்தனர். முன்னாள் பிரதமர் அபே சுட்டு கொல்லப்பட்டதால் உருவான அனுதாப அலையினால், ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.