சென்னை: எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரவித்துள்ளது. 2022-2023ம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணாக்கர்கள் அரசு, அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம், வட்டார மையங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக் கழகம், இதர பல்கலைக் கழகங்கள், சுயநிதி பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை 600 025 மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை 600 006 கட்டுப்பாட்டில் இயங்கும் எம்.பி.ஏ./எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் வாயிலாக தேவையான சான்றுகளுடன் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.