கோவை: கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக சென்னையில் தொழிலதிபர் செந்தில்குமார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார், மணல் சப்ளையர் ஓ.ஆறுமுகசாமி மற்றும் அவர் மகனும் தொழிலதிபருமான செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். செந்தில்குமாரிடம் நேற்று 3வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. அவரது உதவியாளர் பழனிச்சாமி என்பவரிடமும் விசாரணை நடத்தினர். 2 பேரிடமும் போலீசார் தனித்தனியாக பல்வேறு கேள்விகள் கேட்டனர். ஓ. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மணல் தொழிலில் அசைக்க முடியாத சக்தியாக ஆறுமுகசாமி இருந்தார். ஜெயலலிதா இறந்த பின்னர், சசிகலா சிறை சென்ற பிறகு ஓ.ஆறுமுகசாமி ஓரம் கட்டப்பட்டார். ஆனால் அவர் அரசியல் அதிகார மையங்களுடன் இருந்த காலத்தில் கொடநாட்டில் எஸ்டேட் வாங்கியிருப்பதாக தெரிகிறது.