பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரிய பன்னீர்செல்வம் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: பழனிசாமி தரப்பு கோரிக்கை

சென்னை: பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரிய பன்னீர்செல்வம் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரிய ஓபிஎஸ் வழக்கில் தலைமை நிலைய செயலாளர் என ஈபிஎஸ் பதில் அளித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என கூறுகிறோம்; ஆனால் அந்த பதவியில் இருப்பதாக ஓபிஎஸ் வழக்கு தொடர்கிறார். ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்றால் அவர் ஒருங்கிணைப்பாளர் பதவியில் நீடிப்பதாக ஆகிவிடும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: