மாஸ்கோ : உக்ரைன் மீது ரஷ்யா இன்னும் முழு அளவில் போர் தொடுக்கவில்லை என்று கூறியுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், முடிந்தால் போர்க்களத்தில் ரஷ்யாவை வென்று காட்டுங்கள் என்று மேற்கு உலக நாடுகளுக்கு சவால் விடுத்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே பேசிய புதின், போர் நீண்ட காலம் நீடிக்கும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறைந்தே இருக்கும் என்றார். உக்ரைனில் ரஷ்யா இன்னும் தீவிரமான போரை தொடங்கவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று கூறிய அவர், அதே நேரத்தில் பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராகவே இருப்பதாக குறிப்பிட்டார்.