குன்றத்தூர்: மாங்காடு சுற்று வட்டார பகுதிகளில் பூட்டியிருக்கும் வீட்டின் பூட்டை உடைத்து, கொள்ளையடித்து வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 22 சவரனை பறிமுதல் செய்தனர். மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை மாங்காடு போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாங்காடு பிரதான சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக 2 வாலிபர்கள் வந்தனர். போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், இருவரும் தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.