மாணவியை கடத்தி வாலிபருக்கு திருமணம்; 2 பெண்கள் கைது!

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது பெண். குடியாத்தத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் அக்கம்பக்கம், உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பரதராமி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் குடியாத்தம் அடுத்த வரதரெட்டிபல்லி கிராமத்தைச் சேர்ந்த வில்வநாதன் மனைவி சுமதி(51), குடியாத்தம் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த லோகநாதன் மனைவி டில்லி(45) ஆகியோர் மாணவியை கடத்திச்சென்று வாலிபர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 2 பெண்களையும் நேற்று கைது செய்து குடியாத்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர். கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories: