கம்பம்: நெகிழி இல்லா தமிழகம் உருவாக்கவும், தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டுவரும் வகையிலும் கிராமப்பகுதிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாராயணதேவன்பட்டி ஊராட்சியில் இத்திட்டத்தின்படி பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து இதில் பிளாஸ்டிக் பை, எண்ணெய் கவர், பால் கவர், பிஸ்கட் கவர், மசாலா பாக்கெட் கவர் ஆகிய பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து கொடுத்தால் ஊராட்சி சார்பில் ஒரு கிலோ 8 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊராட்சிப்பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.