20 ஆண்டுகளுக்கு பிறகு தோகைமலை அருகே மீன்பிடி திருவிழா: ஆர்வமுடன் மீன்பிடித்த பொதுமக்கள்

தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பில்லூர் ஊராட்சி பில்லூரில் சுமார்120 ஏக்கர்பரப்பளவில் அரசுக்கு சொந்தமான பெரிய குளம் உள்ளது. பருவமழையின் போது நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர்இக்குளத்தில் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழைநீரானது மதகு வழியாக அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர்ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது. இதேபோல் மழைகாலங்களில் மழைநீரோடு பல்வேறு வகையான மீன்கள் கோவில் குளத்திற்கு வருது உண்டு. இந்த குளத்தில் வளர்ந்து வரும் மீன்களை கோடைகாலங்களில் தண்ணீர்வற்றும் போது அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து மீன்படிப்பது வழக்கம். அப்போது மீன் பிடி திருவிழாவாக வெள்ளை விசிறி மீன்களை பிடிக்க தொடங்குவர். ஆனால் மழை காலங்களில் இக்குளம் நிறம்பி காணப்பட்டாலும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக மழைபெய்து வெள்ளம் வந்தால் மட்டுமே இக்குளத்திற்கு மீன்கள் வரும். குடந்த 20 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் மீன்கள் வராமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அனைத்து பகுதிகளிலும் பருவமழை பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் மழைநீரால் நிரம்பி வழிந்தது. இதனை அடுத்து பெரும்பாலான ஏரி குளங்களுக்கு பல்வேறு வகையான மீன்கள் வரத்தொடங்கியது. இதேபோல் பில்லூர் பெரிய குளத்திற்கும் பல்வேறு வகையான மீன்கள் வெள்ளநீரால் வந்து வளர்ந்து வந்தது. தற்போது கோடைகாலம் தொடங்கியதால் இந்த குளத்தில் உள்ள மீன்களை பிடிக்க 8 பட்டி ஊர்முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். இதனை அடுத்து கிராம மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் 20 ஆண்டுளுக்கு பிறகு நேற்று சமூக ஒற்றுமையின் மீன்பிடி திருவிழா நடந்தது.முன்னதாக பில்லூரில் உள்ள மாரியம்மன், பாம்பலம்மன், பட்டதளச்சியம்மன் உள்பட மந்தையில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு அபிசேகம் செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து பட்டதளச்சியம்மன் கோவில் அருகே குளத்து கரையில் பில்லூர், ஊர்நாயக்கன்பட்டி, கம்பிலிநாயக்கன்பட்டி, முத்தகவுண்டம்பட்டி, சின்னபில்லூர், பெரியவீட்டுகாரன்பட்டி, ஆனைகவுண்டன்பட்டி, தாதம்பட்டி ஆகிய 8 பட்டி முக்கியஸ்தர்கள் ஒன்று சேர்ந்து வௌ;ளை துண்டை விசிறி மீன்படி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதில் பில்லூர் ஊராட்சி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தூரி, வளை சேலைகள் ஆகியவற்றை கொண்டு கொரவை, அயிர, முள்ளு கண்டை, விரால் போன்ற பல்வேறு வகையான மீன்களை பிடித்து சென்றனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சமூக ஒற்றுமையின் மீன்பிடி திருவிழா நடந்ததால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: