சென்னை: உலக சந்தையில் காஸ் விலை குறையும்போதும் கூட உள்நாட்டில் விலை உயர்த்தப்படுவது ஏன் என ஒன்றிய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவு: சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1068.50 ஆக அதிகரித்திருக்கிறது. சமையல் எரிவாயு விலை ரூ.1000ஐக் கடந்த பிறகும் மாதம் தவறாமல் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது எந்த வகையிலும் நியாயமல்ல. சமையல் எரிவாயு விலை கடந்த 14 மாதங்களில் 12 முறை உயர்த்தப்பட்டுள்ளது.