54 வயதிலும் ஆணழகன் போட்டியில் சாதித்த விவசாயி: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி, 54 வயதிலும் ஆணழகன் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், படவேடு அருகே நொலம்பை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(54), இயற்கை விவசாயி. இவர் யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர். இதனால் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று தீவிர பயிற்சி செய்து வந்தார். மேலும், பல்வேறு இடங்களில் நடந்த ஆணழகன் போட்டிகளிலும் பரிசுகளை பெற்று வந்தார்.

கடந்த 3ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் ஆணழகன் போட்டி நடந்தது. இதில், 7 மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டு தங்களது ஆற்றலை வெளிப்படுத்தினர். இதில், விவசாயி கண்ணன் 4ம் இடம் பெற்றார். இதுகுறித்து கண்ணன் கூறுகையில், `இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல், உடற்பயிற்சி கூடத்தை நோக்கி செல்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எனது லட்சியம்’ என்றார்.

Related Stories: