கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி, 54 வயதிலும் ஆணழகன் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், படவேடு அருகே நொலம்பை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(54), இயற்கை விவசாயி. இவர் யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர். இதனால் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று தீவிர பயிற்சி செய்து வந்தார். மேலும், பல்வேறு இடங்களில் நடந்த ஆணழகன் போட்டிகளிலும் பரிசுகளை பெற்று வந்தார்.