நாசிக்: ஆப்கானிஸ்தானை சேர்ந்த மதகுருவை, மகாராஷ்டிராவில் மர்ம கும்பல் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் யோலா நகரில் நேற்றிரவு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதி மதகுரு ஒருவர் மீது அடையாளம் தெரியாத நான்கு பேர் கும்பல் திடீரென தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை தொடர்ந்து அவர்கள் ஆப்கானிஸ்தான் மதகுரு மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அவரது தலை மற்றும் கழுத்தை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவலறிந்த போலீசார் கொலையான மதகுருவை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.