டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் மூன்றாவது முறையாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்கக்கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.