சென்னை: சசிகலா இன்று முதல் மூன்று நாட்கள் வானூர், திருக்கோவிலூர், உளுந்தூர்ப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்னை தீவிரமைடந்துள்ள நிலையில் சசிகலாவும் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். இந்தநிலையில், சசிகலா இன்று மதியம் 2 மணிக்கு தி.நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் மன்னார்சாமி கோயிலுக்கு அருகிலிருந்து தனது பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து பெருமுக்கல்-நல்லாளம் கூட்டுரோடு, பிரம்மதேசம், ஆலங்குப்பம், முருக்கேரி, கந்தாடு, மரக்காணம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்கிறார்.