நெல்லை: நெல்லை கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தாமிரபரணி நதிக்கரையில் நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே புதிய பஸ்நிலையம் புதுப்பிக்கப்பட்டு கூடுதல் பஸ்கள் நிறுத்தும் பாந்துகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் அறிவியல் மையமும் திறக்கப்பட்டுள்ளது. சாலை பஸ் நிறுத்தங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் வஉசி மைதானம் நவீன வசதிகளுடன் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.