காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பிரகஸ்பதி என்கிற குரு பகவான் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அருகே உள்ள கூழமந்தல் கிராமத்தில் பிரகஸ்பதி என்கிற குரு பகவான் கோயில் தனி சன்னதியாக நட்சத்திர விநாயகர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தாரை குரு பகவானின் இடது தொடையில் அமர்ந்து யானை வாகனத்தில் மீதேறி தம்பதி சமேதராய் அருள் பாலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.