தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் 2ம் தேதி வரை மேற்கு திசை காற்றின் வேகமாறுபட்டால் கனமழை தொடரும். இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும். ஜூலை 3,4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காரணப்படும், ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜூலை 2 வரை லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா, தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த சூறாவளி வீசக்கூடும்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழகம், இலங்கை கரையோரம் பலத்த காற்று வீசக்கூடும். 40-50 கி.மீ.வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாக மீனவர்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Related Stories: