மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் கீழ் மருவத்தூர் ஊராட்சி உள்ளது. இங்கு, கிராம வரைபடம் மூலமாக சுகாதாரப்பணிகள் மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊராட்சிமன்ற தலைவர் வி.மாசிலாமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் எஸ்.அபிராமி முன்னிலை வகித்தார். இதற்கு முன்னதாக, முழு சுகாதார மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமுத்து, தங்கராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி கலந்துகொண்டனர். மேலும் இதில், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஊராட்சியின் முழு வரைபடம் வரையப்பட்டிருந்தது. அதில், எந்தெந்த பகுதியில் சாலைகள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பஜார் வீதிகள், பேருந்து நிறுத்தம், பள்ளிகள், அமைந்துள்ளன என்பது குறித்து எழுதப்பட்டிருந்து.