கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கு வேட்பு மனுதாக்கல்

கும்மிடிப்பூண்டி: திமுகவின் 15வது தேர்தலை ஒட்டி ஒன்றிய செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் எம்எல்ஏவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சிவ ஜெயராஜ் தேர்தல் பார்வையாளராக பங்கேற்ற நிலையில் அவரிடம் திமுக ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிட  வேட்புமனுக்களை  20 க்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்தனர். நிகழ்வில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், பொறுப்பு குழு உறுப்பினர்கள்  சிவாஜி பகலவன், வெங்கடாசலபதி,  , ரவி, கதிரவன், கோதண்டன், சுரேஷ், நிலவழகன்,செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் மு.மணிபாலன், கி.வே.ஆனந்தகுமார் உள்ளிட்ட   பலர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி தெற்கு, கிழக்கு ,மேற்கு, எல்லாபுரம்  வடக்கு, தெற்கு, பூண்டி கிழக்கு, மீஞ்சூர் வடக்கு, தெற்கு, சோழவரம் வடக்கு என 11 ஒன்றியங்களுக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிட  தெரிவித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.மேலும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒன்றிய அவைதலைவர், 3 துணை செயலாளர்கள், 1 பொருளாளர், 3மாவட்ட பிரதிநிதி, 11 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் போட்டியிடுபவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.இதில் கணேசன், ஜெயச்சந்திரன், கண்ணிகை ஸ்டாலின், வெற்றி, மாவட்ட இளைஞரணி ஆனந்தகுமார், புருஷோத்தமன், ஆரணி முனிவேல் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர் .

Related Stories: