ஈரோடு: ஈரோட்டில் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை வலுக்கட்டாயமாக எடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அந்த சிறுமியின் தாய் இந்திராணி, வளர்ப்பு தந்தை மற்றும் பெண் புரோக்கர் மாலதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தனது வளர்ப்பு தந்தை மூலம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாலும், பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும் இவருக்கு வலுக்கட்டாயமாக கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளதாலும் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். யாரிடமும் சரியாக பேசாமல் தனக்கு ஏற்பட்ட நிலையை கருதி அமைதியாக இருந்து வந்தார்.