மிசவுரி: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சிகாகோ நோக்கி, 8 பெட்டிகள் கொண்ட ஆம்டிரக் ரயில் சென்று கொண்டிருந்தது. ரயிலில் 243 பயணிகள் மற்றும் 12 ரெயில்வே ஊழியர்கள் இருந்தனர். மிசவுரி நகரில் உள்ள மென்டன் என்ற பகுதியில் சென்றபோது, அவ்வழியாக வந்த ஒரு லாரி, ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளது. அப்பகுதியில், அபாய எச்சரிக்கை அம்சங்கள் எதுவும் இல்லை. அதனால் லாரி ரயில்வே கிராசிங்கை கடந்தபோது, அதன் மீது ஆம்டிரக் ரயில் மோதியது.