மதுரை: ஓ.பன்னீர்செல்வத்தின் பயணம் வெற்றிபெறாது என்று அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்திருக்கிறார். அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் தற்போதுள்ள இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் ஆதரவாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். மழை விட்டும் தூவானம் விடாத கதையாக அதிமுகவில் சர்ச்சைகள் ஓயவில்லை. இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தலில் தனது தொகுதியில் மட்டுமே பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்; யாருக்காகவும் பிரச்சாரம் செய்யவில்லை என ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டினார்.