சென்னை: பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் குறித்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள ஆழியாறு அணையிலிருந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக, கூட்டுக் குடிநீர் திட்டம் ஒன்றை செயல்படுத்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உத்தேசித்துள்ளது.