மதுரை: அதிமுக ஆட்சியில் ரூ.700 கோடி நில மோசடி செய்த நில அளவையர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியது. வழக்கில் தொடர்புடைய நில அளவையர்கள் செல்வராஜ், சக்திவேல் ஆகியோருக்கு ஐகோர்ட் மதுரை கிளை நிபந்தனை ஜாமின் அளித்தது. மிகப்பெரிய அளவில் ரூ.700 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி, எனவே ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.