சென்னை: சென்னை கே.கே.நகரில் மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது இயற்கையானது என்று மாநகராட்சி மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார். மழைநீர் வடிகால் பணிகளுக்கும், விபத்துக்கும் தொடர்பில்லை என மாநகராட்சி கூறியுள்ளது. மரங்கள் முறிந்து விழுவதை தடுக்க பழமையான மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் மேயர் பிரியா தெரிவித்தார்.