லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் அரசு பொறியியல் கல்லூரியின் செங்கல் சுவரை சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர் வெறும் கையால் தள்ளிவிடும் காணொளி வைரலாகி வருகிறது. உத்திரப்பிரதேசம் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள சிவ்ஷாத் கிராமத்தில் அரசு பொறியியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு சென்ற சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கே.வர்மா, வெறும் கையால் தள்ளியபோதே அந்த செங்கல் சுவர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இந்த காணொளியை பகிர்ந்து, பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசின் ஊழல் தனித்துவமானது என்று
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் பதிவில் கண்டித்துள்ளார்.