பீடல்: நாடு முழுவதும் சமீப காலமாக புல்டோசர் என்ற பெயர் அதிகளவில் அடிபடுகிறது. காரணம், பாஜ ஆளும் மாநிலங்களில் கலவரம், குற்றங்களில் ஈடுபடுவோரின் வீடுகள், கடைகள் போன்றவை உடனுக்கு உடனாக புல்டோசரில் இடித்து தள்ளப்படுகிறது. இது பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், ஒரு வாலிபர் தனது மாப்பிள்ளை ஊர்வலத்தை புல்டோசரில்தான் நடத்த வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து சாதித்தும் இருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலம், பீடல் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜல்லார் கிராமத்தை சேர்ந்தவர் அன்குஷ் ஜெய்ஷ்வால். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் திருமணத்திற்கான மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
