பரமக்குடி: பரமக்குடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை வேளாண்மை துணை இயக்குனர் ஷேக் அப்துல்லா ஆய்வு செய்தார். பரமக்குடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், மேலாய்குடி கிராமத்தில் வேளாண்மைத்துறை மூலம் தரிசு நில தொகுப்பில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக குழாய்க்கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.