சீர்காழி அருகே நாங்கூர் சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சீர்காழி : சீர்காழி அருகே தென்னல குடியிலிருந்து நாங்கூர் செல்லும் சாலையில் திருப்பாற்கடல் அருகில் இரண்டு இடங்களில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வழிந்தோடி வருகிறது.இதனால் பல்வேறு கிராமங்களுக்கு சரிவர தண்ணீர் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சாலையில் தண்ணீர் வழிந்து ஓடி வருவதால் புதிதாக போடப்பட்ட சாலை பழுதடைந்து வருகிறது. உடைப்பு ஏற்பட்ட பைப் வழியாக தண்ணீர் வெளியேறி மீண்டும் கழிவு நீருடன் கலந்து உடைப்பு ஏற்பட்ட பைப் வழியாக உள்ளே சென்று விடுகிறது இந்த தண்ணீர் தான் பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக உடைப்பு ஏற்பட்ட பைப்பை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: