குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவு செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் என்கிற திரு.க.ராமச்சந்திரன் மறைவுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், மூத்த ஊடகவியலாளரும் குமுதம் வார இதழின் ஆசிரியருமான ப்ரியா கல்யாணராமன் என்கிற திரு.க. ராமச்சந்திரன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

முப்பதாண்டுகளாக குமுதம் இதழில் பணியாற்றி வரும் அவர் பல நூல்களை எழுதியிருப்பதுடன், பல எழுத்தாளர்களையும் ஊக்குவித்தவர் என்பதை ஊடக உலகினர் நன்கறிவார்கள். குமுதம் இதழைக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தி வந்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. திரு. ப்ரியா கல்யாணராமன் அவர்களின் திடீர் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும், குமுதம் நிறுவனப் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ப்ரியா கல்யாணராமன் மறைவு:

குமுதம் ஆரிசியார் ப்ரியா கல்யாணராமன் (55) மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக குமுதம் இதழில் பணியாற்றி வந்தவர் ப்ரியா கல்யாணராமன். ஆன்மீகம் தொடர்பாக அதிக கட்டுரைகளை எழுதியுள்ளார்.

Related Stories: