புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்காக ஆன்லைன் விண்ணப்பம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என ராணுவம் அறிவித்துள்ளது. அக்னிபாதை திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி முதல் விமானப்படை ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்க உள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘அக்னிபாதை திட்டத்தின் கீழ் சேர்வதற்கு விரும்பும் அனைவரும் ஆட்சேர்ப்பு இணையத்தில் விண்ணப்பிப்பது கட்டாயமாகும். ஜூலை முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும். ராணுவத்தில் அக்னி வீரர்களுக்கென்று பிரத்யேக தரவரிசை அமைக்கப்படும். இது தற்போதுள்ள மற்ற பிரிவுகளில் இருந்து வேறுபட்டதாக இருக்கும்.