அதிமுக பொதுக்குழுவில் ரவுடிகளை அனுப்பி தாக்க பழனிசாமி தரப்பு திட்டம்?: டிஜிபி அலுவலகத்தில் பன்னீர்செல்வம் தரப்பு புகார்..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி, அதிமுக பொதுக்குழுவில் ரவுடிகளை அனுப்பி தாக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக டிஜிபி அலுவலகத்தில் பன்னீர்செல்வம் தரப்பில் புகார் அளித்திருப்பதாக கூறினார். வானகரம் தனியார் மண்டபம் அருகே உள்ள மண்டபங்களில் ரவுடிகள் குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்தின்போது ரவுடிகளை அனுப்பி தாக்க திட்டமிட்டுள்ளனர்.

பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்த ஒருங்கிணைப்பாளரே ஒத்திவைக்க சொல்வதால் வைத்திவைப்பதே நல்லது. பொதுக்குழுவுக்கு போலீஸ் அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய புகழேந்தி, ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு மிரட்டுவதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளோம். பழனிசாமி தரப்பு சர்வாதிகாரப் போக்குடன் ஒற்றைத் தலைமையை கொண்டுவர முயற்சிக்கிறது. ஒற்றைத் தலைமை கருத்தால் அதிமுக கட்சித் தொண்டர்கள் கொதித்துப் போய் உள்ளனர்.

ஒற்றைத் தலைமை கோரிக்கையில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உள்ளது. அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு வைத்தியலிங்கம் கடிதம் எழுதியுள்ளார். நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே நிர்ணயித்து பொதுக்குழுவை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது என்று கூறினார்.

Related Stories: