அக்னி பாதை திட்டத்தை திரும்ப பெற வேண்டும் ஒன்றிய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: அக்னி பாதை திட்டத்தை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வேலை இல்லா திண்டாட்டத்தால் இளைஞர்களிடையே ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பை புரிந்து கொண்டே, இந்திய ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார் என தெரிகிறது. இத் திட்டத்தால் ஆயுள் முழுவதும் வேலைவாய்ப்புக்கு தகுதியற்றவர்களாக, கல்வித் தகுதி இல்லாதவர்களாக இளைஞர்கள் ஆக்கப்படுவார்கள். எனவே, அக்னிபாதை என்ற மோசடி திட்டத்தை உடனடியாக மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்பவேண்டும். அத்துடன், தேர்தலில் வாக்குறுதி அளித்தது போல எஞ்சியுள்ள இந்த இரண்டு ஆண்டுகளிலாவது ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: