சிங்கம்புணரி அருகே ரூ.2,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர், கருமிபட்டியை சேர்ந்தவர் விவசாயி கருப்பையா. இவருக்கு இலவச மும்முனை மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு ஒப்புதல் அட்டை பெற புழுதிப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவரிடம் வணிக ஆய்வாளர் செல்வராஜ், ரூ.2,500 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து கருப்பையா சிவகங்கை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனையின்பேரில் நேற்று கருப்பையா பணத்துடன் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். வணிக ஆய்வாளர் செல்வராஜ், லஞ்சம் வாங்கும்போது போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Related Stories: