கோவில்பட்டி அருகே டெல்லி பாலாஜி - ரேணுகாதேவி அம்மன் கோயிலில் யாகசாலை பூஜை: கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்பு

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே டெல்லி பாலாஜி- ரேணுகாதேவி அம்மன் கோயிலில் நாளை மறுநாள் (வெள்ளி) நடைபெறும் மகாகும்பாபிசேகத்தையொட்டி யாகசாலை பூஜை தொடங்கியது. இதில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்று புனித நீர் குடங்களில் நீரை நிரப்பினார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இ.சத்திரப்பட்டியில் டெல்லி பாலாஜி - ரேணுகாதேவி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

இக் கோயிலின் மகா கும்பாபிசேகம் நாளை மறுநாள் (17ம்தேதி) நடக்கிறது. இதையொட்டி இன்று காப்பு கட்டுதல், கும்பங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு கோயிலை வலம் வந்து யாகசாலையில் எழுந்தருளல் மற்றும் கோ பூஜை ஆகியவை நடந்தது. நிகழ்ச்சியில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு புனித நீர் குடங்களில் நீரை நிரப்பினார். இதில் ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: