விராலிமலை கோயில் தேரோட்டத்தில் 8 பேரிடம் செயின் பறித்த பெண் கைது

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயிலில் கடந்த 12ம் தேதி வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி 8 பெண்களிடம் இருந்து தங்க செயினை சிலர் பறித்து சென்றனர்.

இதுகுறித்து புகார்களின் பேரில், விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த நகை பறிப்பு சம்பவத்தில் சேலம் மாவட்டம், காக்காபாளையம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமு மனைவி துளசி (30) ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று துளசியை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Related Stories: