திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகும், தொழிலாளர் துறை மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் ஒருங்கிணைந்து உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பூண்டி ஒன்றியத்தில் உள்ள மொன்னவேடு கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.இந்த முகாமில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், பெற்றோர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தலின் அவசியம், பள்ளி படிப்பை சிறார்களுக்கு உறுதி செய்தல், இடைநிற்றலை தவிர்த்தல், குழந்தை தொழிலாளர் முறையில் ஏற்படும் தனிநபர், குடும்பம் மற்றும் சமுதாய பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் ஐ.ஆர்.சி.டி.எஸ் சிறுவர் குழுவை சார்ந்த மணிமேகலை குழந்தைகளின் நான்கு முக்கிய உரிமைகளை விளக்கமாக எடுத்து கூறினார்.