புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி நாளை டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளார். அப்போது நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு முன்பு சத்தியாக் கிரக போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மேலும், இளைஞர் காங்கிரஸ் தரப்பில் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு முன்பு போராட்டங்களை நடத்தவும், டெல்லியில் ராகுல் காந்தி ஆஜராக உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணி செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.