சென்னை: இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். தொடர்ச்சியான ஆன்மீகத்தில் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும். இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். தற்போது வலிமையான தலைமை இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.